Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சோவியத் பள்ளிக்கு பிந்தைய வரலாற்று பொய்மைப்படுத்தலுக்கு எதிரான போராட்டம்

223. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளேயும், அதன் கருத்தியல் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஒரு வெற்றி ஆரவாரத்தைத் தூண்டிவிட்டது. சோசலிச வஞ்சத்தீர்வு ஒருமுறை முற்றிலுமாக கீழே விழுந்துவிட்டது சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்கு முதலாளித்துவ வர்க்கங்களின் பொருள்விளக்கமானது, பிரான்சிஸ் ஃபுகுயாமாவின் [ வரலாற்றின் முடிவு ] [The End of History] இல் முக்கிய வெளிப்பாட்டைக் கண்டது. ஹெகலின் கருத்துவாத சொற்றொடரின் எழுத்து பதிப்பை எடுத்துக்காட்டி, வரலாற்றின் இறுதி அணிவகுப்பு அதன் இறுதி இடத்திற்கு, அதாவது தடையில்லா முதலாளித்துவ சந்தையை அடிப்படையாக கொண்ட ஓர் அமெரிக்க பாணியிலான தாராண்மை முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு வந்துவிட்டதாக ஃபுகுயாமா அறிவித்தார். இது மனித நாகரீகத்தின் உச்சிநிலையாக இருந்தது இந்த கருத்து, எளிதில் ஏமாற்றும் மற்றும் அகநிலைவாத அவதானங்களை அடித்தளமாக கொண்ட குட்டி முதலாளித்துவ கல்வியாளர்களால் எண்ணற்ற மாற்றங்களுடன் விளக்கப்பட்டது. இந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வரலாற்றின் வெற்றி பெறும் பக்கத்தில் எப்போதும் இருந்துகொள்ள விருப்பம்கொண்டிருப்பார்கள். வரலாற்றாசிரியர் மார்ட்டீன் மாலியா எழுதும் போது, சோவியத் ஒன்றியத்தின் சிதைவில் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முடிவு என்னவென்றால் சோசலிசம் என்பது வெறும் கற்பனை மட்டுமே. "ஒட்டுமொத்தமாக," சோசலிசம் என்பதொரு கற்பனாவாதம், அந்த வார்த்தையின் இலக்கிய பொருள் என்னவென்றால், இடமேதுமற்ற அல்லது எங்குமில்லாத நடைமுறைக்கொவ்வாத 'ஒன்று'." என்று குறிப்பிட்டார்.[127]

முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிமுழக்கவாதம் அமைப்பு இறுதியாக சிதைவுறும் வரையிலும் கூட பெருமளவில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை சோசலிசத்தின் பாதுகாவலனாக பார்த்த இடதுகளால் சவால்விடப்படாமல் இருந்தது. உண்மையில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு சோசலிசத்தின் குறிப்பிடத்தக்க தோல்வி என்ற ஃபுகுயாமா மற்றும் மாலியாவிற்கும் குறைவாக அவர்கள் சமாதானமடையாமல் இல்லை. பல விடயங்களில், சோசலிசம் ஒரு சட்டப்பூர்வ வரலாற்று செயற்திட்டம் என்பதில் நம்பிக்கை இழந்து மறுதலித்தல், அவர்களின் ஆரம்பகால நிலைப்பாடுகளையும் மற்றும் முன்னோக்குகளை ஆராய விருப்பமில்லாத தன்மையிலிருந்து கிளைத்தெழுந்தது.. மார்க்சிசத்தை பழிதூற்றவும் கைவிடவும் ஆர்வம் கொண்டவர்கள், குறைந்தபட்சம் ஸ்ராலினிசத்தின் அனைத்து ட்ரொட்ஸ்கிச ஆய்வுகளைக் கூட, சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்கு பின்னால் இருந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள விருப்பமுறவில்லை. அவர்கள் ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்று இருந்திருந்ததா என்ற கேள்வியைக்கூட அதாவது, 1920களின் முக்கிய உட்கட்சி போராட்டங்களில் ட்ரொட்ஸ்கியின் அரசியல் வேலைத்திட்டம் மேலோங்கி இருந்திருந்தால், சோவியத் ஒன்றியத்தின் அல்லது இருபதாம் நூற்றாண்டின் வரலாறு மிகவும் வேறுபட்ட பாதையில் வளர்ச்சியடைந்திருக்குமா என்ற கேள்வியை அவர்கள் தவிர்க்க விரும்பினார்கள்.

224. உண்மையில் நடைபெற்றதை தவிர ஒரு வேறுபட்ட வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஒரு வரலாற்றாளருக்கு பொருந்தாது என்று நீண்டகால கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான ஆங்கில வரலாற்றாளர் எரிக் ஹொப்ஸ்பாம் வெளிப்படையாகவே அறிவித்தார். "ரஷ்ய புரட்சியானது ஒரு பின்தங்கிய மற்றும் விரைவில் முற்றுமுழுதான அழிந்துபோன நாட்டில் சோசலிசத்தை கட்டுவதற்கு தீர்மானித்திருந்தது...."[128]

புரட்சிகர செயற்திட்டமே ஒரு முற்றிலும் அரசியல் சாத்தியப்பாடுகளின் யதார்த்தமற்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ரஷ்யா புரட்சியிலிருந்து ஒரு மாற்றீடான விளைவை கவனத்தில்கொள்வது கூட அர்த்தமற்றது என்று ஹொப்ஸ்பாம் வாதிட்டார். "என்ன நடந்தது என்பதில் இருந்து வரலாறு தொடங்க வேண்டும்," "மற்றவை எல்லாம் ஊகங்கள் தான்." என்று ஹொப்ஸ்பாம் அறிவித்தார்.[129]

225. ஸ்ராலினிசத்திற்கான வரலாற்றுரீதியான மாற்றீடு பற்றிய எந்த சாத்தியக்கூறு குறித்தும் ஹொப்ஸ்பாமின் இறுமாப்பான வெளியீட்டிற்கு நோர்த் பதிலளிக்கையில் குறிப்பிட்டதாவது:

"என்ன நடந்தது" என்பதற்கு இதுவொரு சாதாரண கருத்து - அந்த நாட்களில் பத்திரிகைகளில் என்ன வெளியாயின என்பதற்கு அப்பாற்பட்டு எதையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் - நிச்சயமாக வரலாற்று நிகழ்வுப்போக்கில் அதுவொரு சிறிய பகுதி தான். அனைத்திற்கும் மேலாக, "என்ன நடந்தது" என்பதை மட்டும் வரலாறு கருத்தில் எடுத்து கொள்ளக்கூடாது, என்ன நடந்திருக்கலாம் என்பதையும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஒருவர் ஒரு நிகழ்வை, அதாவது "என்ன நடந்தது" என்பதை மட்டும் கருத்தில் எடுத்துக் கொள்ளும்போது, நிகழ்வுபோக்கையும் மற்றும் உள்ளடக்கத்தையும் மட்டும் கவனத்தில்கொள்ள ஒருவர் தன்னை கட்டாயப்படுத்திக் கொள்கிறார். ஆம், 1924 இல், "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற கொள்கையை சோவியத் ஒன்றியம் கொண்டிருந்தது. அது ''நடந்தது''. அதற்கேற்ப தனியொரு நாட்டில் சோசலிசம் என்பதற்கு எதிரானதும் "நடந்தது".

ஹொப்ஸ்பாம் ஒரு வார்த்தை கூட கூறாத, ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் இடது எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான முரண்பாடும் "நடந்தது". அவர் ஒரு வேறுபட்ட திசையில் சோவியத் ஒன்றியத்தின் கொள்கைகளில் பங்குகொள்ள விரும்பிய எதிர்சக்திகள் குறித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேண்டுமென்றே விட்டுவிடுவதும் அல்லது முக்கியமற்றவை என்று விட்டுவிடுவதும், அவரின் "என்ன நடந்தது" என்ற வரையறை மிகவும் சிக்கலான வரலாற்று உண்மைகளை ஒரு பக்கசார்பாக, ஒரு கோணத்தில், செயல்முறைவாத வகையில் மற்றும் பொதுவாக எளிமைப்படுத்துவதை மட்டுமே கொண்டிருக்கிறது. "என்ன நடந்தது" என்பதில் இருந்து தொடங்கி, வெறுமனே "யார் வென்றார்கள்", "யாருடன் வென்றார்கள்" என்று முடிப்பது மட்டுமே என ஹொப்ஸ்பாம் கருதுகிறார்.[130]

226. சோவியத் ஒன்றியத்தின் பொறிவைத் தொடர்ந்து ஹொப்ஸ்பாமின் தலைவிதிவாதத்திற்கு ஆதரவான அனுதாபிகள், மாபெரும் வரலாற்று பொய்ம்மைப்படுத்தல் பிரச்சாரத்தை சீர்படுத்தி திருத்தி கூறி வந்தார்கள். ஒரே இரவில் தங்களைத்தாங்களே மிகவும் கசப்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களாக மாற்றிக் கொண்ட முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள் இந்த பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார்கள். ரஷ்ய புரட்சி என்பது ரஷ்ய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு கூட்டுசதி என்று அவர்கள் முடிவில்லாமல் வாதிட்டார்கள். இந்த வகையில் ஜெனரல் டிமிட்ரி வொல்கோகோனோவ் மட்டும் மிகவும் சிறப்பாக அறியப்பட்டவர். லெனின் உருவாக்கிய எமது 'பாதைக்காக' எல்லாவற்றிற்கும் மேலாக ("above all because the ‘cause’) திட்டம் தொடர்பான தனது அணுகுமுறை மாற்றத்தை பற்றி குறிப்பிடுகையில் பல மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வை இழந்தார்கள் என்பதுடன் ஒரு மாபெரும் வரலாற்று தோல்வியை அது சந்தித்தது என வொல்கோகோனோவ் எழுதிய லெனின் வாழ்க்கை வரலாற்றில், ஒருவேளை தாம் விரும்பியதை விடவும் அதிகமாக அவர் வெளியிட்டிருந்தார் போலும். "[131]

வொல்கோகோனோவ் குறிப்பிட்ட குற்றங்களில், 1918 ஜனவரியின் அரசியல் சட்டமன்ற கலைப்பில் லெனினை குற்றஞ்சாட்டினார். இந்த நிகழ்வில் ஒரு நபர் கூட காயமடையவில்லை. ஆனால், 1993 அக்டோபரில் ரஷ்ய வெள்ளை மாளிகையில் டாங்கி தாக்குதலை கண்காணிப்பதில் இருந்து, ரஷ்யாவின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பொரீஸ் யெல்ட்சினின் இராணுவ ஆலோசகராக பதவி வகிப்பதில் வொல்கோகோனோவ்வை இது எவ்வகையிலும் தடுத்து விடவில்லை. இதில் சுமார் 2,000திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

227. அதன் 1992 மார்ச் பேரவையில், ஒரு புறநிலை நிகழ்வுப்போக்காக முதலாளித்துவ நெருக்கடியின் வளர்ச்சி மற்றும் வர்க்க போராட்டங்களுக்கு இடையிலான உறவுகளையும் மற்றும் சோசலிச நனவின் வளர்ச்சியையும் பற்றி அனைத்துலக குழு விவாதித்தது:

வர்க்கப் போராட்டத்தின் தீவிரம் புரட்சிகர இயக்கத்திற்கான பொது அடித்தளத்தை அளிக்கிறது. ஆனால் அதன் முன்னேற்றத்திற்கு தேவையான அரசியல், அறிவாற்றல் மற்றும் கலாச்சார சூழலை அது தானாகவே நேரடியாக மற்றும் தன்னிச்சையாக உருவாக்கி கொள்வதில்லை. ஓர் உண்மையான புரட்சிகர சூழ்நிலைக்கான வரலாற்று அமைப்பை அது உருவாக்குகிறது. புரட்சிகர இயக்கத்தின் புறநிலை அடிப்படை மற்றும் செல்வாக்குமிக்க வரலாற்று சக்தியாக உருவாவதற்கான சிக்கலான அரசியல், சமூக மற்றும் கலாச்சார செயல்முறைக்கு இடையிலான இந்த தனித்தன்மையை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே ஸ்ராலினிசத்திற்கு எதிரான நமது வரலாற்று போராட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என்பதுடன் இன்று நம்மை நிலைநிறுத்தி உள்ள பணிகளையும் நம்மால் காண முடியும்.[132]

228. சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் ஒரு சோசலிச கலாச்சாரத்தை மீட்டமைப்பதற்கு வரலாற்றை பொய்மைப்படுத்துவோருக்கு எதிரான ஒரு திட்டமிட்ட போராட்டம் தேவைப்பட்டது. ரஷ்ய புரட்சி உட்பட புரட்சிகர சோசலிசத்தின் மாபெரும் பாராம்பரியத்துடன் அதன் போராட்டங்களை இணைக்க, இருபதாம் நூற்றாண்டின் உண்மையான வரலாறை தொழிலாள வர்க்கத்திற்கு போதிக்க வேண்டிய அவசியம் இருந்தது. 1992 மார்ச் பேரவைக்கு பின்னர், சோவியத்திற்கு பின்னான வரலாற்றை திரிபுபடுத்தும் பள்ளியின் (Post-Soviet School of Historical Falsification இன்) வாதங்களை மறுத்து வாதிட, வரலாற்று உண்மைகளை பாதுகாக்கும் நோக்கில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது. 1993 தொடக்கத்தில், அனைத்துலகக் குழு சோவியத் மார்க்சிச முன்னணி சமூகவியலாளர் மற்றும் வரலாற்றாளர் வாடிம் ரோகோவினுடன் ஒரு நெருக்கமான கூட்டுழைப்பை தொடங்கியது.

சோவியத் கல்வியாளர்களின் பெரும் பிரிவினர் வலதுசாரி மற்றும் முதலாளித்துவ மீட்டமைப்பு ஆதரவுகளை நோக்கி தீவிரமாக நகர்ந்த சூழலின் கீழ், ட்ரொட்ஸ்கிசத்திற்கும் மற்றும் இடது எதிர்ப்பினருக்கும் மறுவாழ்வளிக்க ரோகோவின் பணியாற்ற தொடங்கி இருந்தார். 1993 இல், இடது எதிர்ப்பினரின் வெளிப்பாடுகளை ஆராய்ந்து, அங்கு மாற்றீடு ஏதாவது இருந்ததா? (Was There an Alternative?) என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தை எழுதி முடித்த பின்னர், ரோகோவின் முதல்முறையாக அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகளை சந்தித்தார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புல்லட்டின் ரஷ்ய மொழி அறிக்கையை அவர் ஏற்கனவே பல ஆண்டுகள் வாசித்திருந்தார். Post-Soviet School of Historical Falsification க்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்தை நடத்துவதற்கான திட்டத்தை அவர் உற்சாகமாக ஏற்றுக் கொண்டார். அனைத்துலகக் குழுவின் ஆதரவுடன், புற்றுநோயால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, ரோகோவின் 1998 செப்டம்பரில் அவரின் மறைவுக்கு முன்னர் அங்கு மாற்றீடு ஏதாவது இருந்ததா? புத்தகத்தின் ஆறு தொகுதிகளையும் எழுதி முடித்திருந்தார்.

229. 1992 மார்ச் பேரவையில், தொழிலாள வர்க்கத்திடையே சோசலிச நனவை ஏற்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் குறித்த அதன் ஆய்வுகளின் அடிப்படையில், அனைத்துலகக் குழு அதன் பணிகளை கலாச்சார பிரச்சினைகளில் விரிவுபடுத்தியது. இடது எதிர்ப்பாளர்களின் அறிவாற்றல்மிக்க பாரம்பரியங்களை புத்துயிரூட்ட விரும்பி இந்த பணி, கலாச்சார பிரச்சனைகளுக்கு பரந்த முக்கியத்துவம் அளித்தது. இந்த கண்ணோட்டம் லியோன் ட்ரொட்ஸ்கியின் Problems of Everyday Life மற்றும் Literature and Revolution, அலெக்சாண்டர் வொரொன்கியின் Art As the Cognition of Life போன்ற பணிகளில் அதன் நிறைவான வெளிப்பாட்டைக் கண்டது. உள்ளுக்குள்ளேயே பணியாற்றிக் கொண்டும், இந்த பாரம்பரியத்தை உருவாக்கும் போதும், அனைத்துலக குழு புரட்சிகர நனவின் அபிவிருத்தி ஓர் அறிவுஜீவித வெற்றிடத்தில் ஏற்படாது, கலாச்சார ஊட்டம் அதற்கு தேவை என்பதையும், மிக முன்னேறிய, அறிவுபூர்வமான விமர்சனம் மற்றும் சமூக முன்னோக்கு கொண்ட சூழலை உருவாக்குவதை ஊக்குவிப்பதிலும், அதில் பங்களிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் மார்க்சிச இயக்கத்தின் தேவை இருப்பதையும் உணர்ந்தது. 1998 ஜனவரியில் அளித்த ஓர் உரையில் டேவிட் வால்ஷ் பின்வருமாறு குறிப்பிட்டார்: மார்க்சியவாதிகள் தங்களின் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குகளை உள்வாங்கி பிரதிபலிக்கும் மக்களை உருவாக்குவதில் பெரும் சவால்களை சந்திக்கிறார்கள். தற்போதைய நிலைமைகளின் கீழ் பாரிய நனவை வளப்படுத்துவதற்கான தேவையை புறக்கணிப்பதென்பது பெருமளவில் பொறுப்பற்றதன்மையாகும்.

எவ்வாறு ஒரு புரட்சி வெளிப்படும்? அது வெறுமனே சாதகமான புறநிலைமை சூழ்நிலைமையில் சோசலிச கிளர்ச்சியினையும் மற்றும் பிரச்சாரத்தினையும் கொண்டுவருவதன் விளைவாக இருக்குமா? அக்டோபர் புரட்சி எவ்வாறு உண்டானதோ அதுபோல் வருமா? சமீபத்திய ஆண்டுகளில் ஒரு கட்சியாக நாங்கள் இந்த நல்ல விவாதத்தில் காலங்களை செலவழித்தோம். எங்களின் இறுதி முடிவுகளின் ஒன்று என்னவென்றால், 1917இல் ஏற்பட்ட புரட்சி சாதாரண தேசிய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் சமூக செயல்முறையால் மட்டும் வந்ததல்ல, அது பல தசாப்தங்களாக ஒரு சர்வதேச சோசலிச கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளின் விளைவாக ஏற்பட்டது. இந்த கலாச்சாரம் முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் சமூக எண்ணங்களின், கலை மற்றும் விஞ்ஞானத்தின் பெருமளவிலான முக்கிய சாதனைகளை உள்ளீர்த்துக் கொண்டு, அதன் வட்டப்பாதைக்குள் கொண்டு வந்தது. 1917ம் ஆண்டு புரட்சிக்கான முக்கிய அறிவாற்றல் அடித்தளங்கள், உண்மையில் முதலாளித்துவ ஆட்சிக்கு முடிவு கட்டுவதை தங்களின் இலக்காக கொண்ட அந்த அரசியல் தத்துவவியலாளர்கள் மற்றும் புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு புரட்சிகர நீரோட்டத்தில் நுழையும் மற்றும் அதை சாத்தியப்படுத்தும் நதிகளும், பிற துணைகளும் ஒன்றை ஒன்று எதிரெதிர் விளைவை ஏற்படுத்தும், முரண்பாடு கொள்ளும் மற்றும் வலிமைப்படுத்தும் செல்வாக்குகளின் ஒரு சிக்கலான அமைப்பு மிகுந்த எண்ணிக்கையில் உள்ளன.

பெரும் எண்ணிக்கையிலான மக்களை திடீரென கிளர்ந்தெழ செய்வதை சாத்தியப்படுவதற்கான சூழலை உருவாக்குவது, பழைய சமூகத்தை நனவுடன் உடைப்பது, தீய எண்ணங்கள், பழக்கங்களை மற்றும் பல தசாப்தங்களாக, ஏன் பல நூற்றாண்டுகளாக கூட கற்றுக் கொண்ட பண்புகளை ஒதுக்கி விடுவது, மக்கள் சுயமாக வாழ்வில் தவிர்க்க முடியாமல் எடுத்துக் கொள்ளப்பட்ட தப்பெண்ணங்கள், பழக்கங்கள் மற்றும் பண்புகள், அவர்களின் சொந்த வெளிப்படையாக மறுப்பதற்கான சுதந்திரமான அதிகாரங்கள் போன்ற இந்த வரலாற்று செயல்களை தாண்டி வருவதும் மற்றும் ஒரு புரட்சிக்கான சூழலை உருவாக்குவது என்பதும் வெறும் அரசியல் பணியால் மட்டும் சாத்தியப்படும் என்று கருத முடியாது.

அனைத்து வகையான சோசலிச மனித இனமும் எதிர்காலத்தின் உருவாக்கமே, அதுவும் தூரத்திலுள்ள எதிர்காலம் அல்ல, என்று நாங்கள் நம்பிக்கைகொள்கின்றோம். ஆனால் சமூக புரட்சி ஓர் யதார்த்தமாவதற்கு முன்னால், பெரும்பான்மையான மக்களின் மனதிலும், மனோபாவத்திலும் எந்த மாற்றமும் தேவையில்லை என்று சொல்லப்படுவது போன்றதல்ல அது. ஒரு கலாச்சார தேக்கநிலை மற்றும் வீழ்ச்சியின் காலத்தில் நாம் வாழ்கிறோம், இதில் பாரியளவிலான மக்களை மயக்கமுறச்செய்யவும், உணர்வற்றிருக்கவும் மற்றும் மிகவும் பின்தங்கிய எண்ணங்கள் மற்றும் மனநிலைகளை அவர்கள் மீது திணிக்க செய்வதற்கான ஒரு முயற்சியில் தொழில்நுட்ப அற்புதங்கள் முதன்மையாக பயன்படுத்தப்படுகின்றன.

மக்களின் முக்கிய இயல்புகளை கூர்மையாக்குதல் என்பது பொய்களில் இருந்து உண்மையை வேறுபடுத்த, தேவையற்றதில் இருந்த தேவையானதை, அதன் கொலைகாரத்தனமான எதிரியிடமிருந்து அதன் சொந்த மூல நலன்களுக்கான அதன் ஒட்டுமொத்த திறமை -- மேலும் பாரியளவிலான மக்கள் உயர்பண்பை வெளிப்படுத்தும், பெரிய தியாகங்களை மேற்கொள்ளும், ஆண்கள் மற்றும் பெண்களை தங்களில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு அதன் ஆன்மநேய மட்டத்தை உயர்த்துவது-- இவை அனைத்தும் ஓர் அறிவுஜீவித்தன முறையிலும் மற்றும் நன்னெறி உயர்த்துதலிலும் எழுகின்றன, ஒட்டுமொத்த மனிதகுல கலாச்சார முன்னேற்றத்தின் விளைபொருளாக கட்டாயம் இருக்கிறது.[133]


[127]

The Soviet Tragedy: A History of Socialism in Russia, 1917-1991[New York: The Free Press, 1994], p. 23.

[128]

“Can We Write the History of the Russian Revolution,” in On History (London: Weidenfeld & Nicolson, 1997), pp. 248.

[129]

Ibid, p. 249.

[130]

Leon Trotsky and the Fate of Socialism in the Twentieth Century, World Socialist Web Site [http://www.wsws.org/exhibits/trotsky/trlect.htm]

[131]

Lenin (New York: The Free Press, 1994), p. xxx.

[132]

“The Struggle for Marxism and the Tasks of the Fourth International,” Report by David North, March 11, 1992, Fourth International, Volume 19, Number 1, Fall Winter 1992, p. 74.

[133]

“The Aesthetic Component of Socialism” (Bankstown, NSW: Mehring Books, 1998), pp. 35-37.