வெனிசுவேலாவிற்குப் பிறகு, ட்ரம்ப் ஈரானை இலக்கு வைக்கிறார் —ஏகாதிபத்திய வெறியாட்டம் தீவிரமடைகிறது
ஈரான் மீது உடனடியாக இராணுவத் தாக்குதலைத் தொடுப்பதுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. 93 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த மத்திய கிழக்கு நாட்டை மீண்டும் நவ-காலனித்துவ அடிமைத்தனத்திற்குள் தள்ளுவதையும், அதன் பரந்த எண்ணெய் வளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையின் அடுத்த கட்டம் இதுவாகும்.
