ஈரான் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் தரைவழி படையெடுப்பிற்கான அச்சுறுத்தல் அதிகரிக்கிறது
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆக்ஸியோஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஈரானில் தரைப்படைகளை நிலைநிறுத்துவது குறித்து "தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக" வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மூன்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவை கைப்பற்றுவதே அவர்களின் மிகவும் சாத்தியமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
